சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த 74 வயது மூதாட்டியின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்துள்ளது.
காலி கரந்தெனிய பிரதேசத்தில் பதிவாகியுள்ள இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டொன்றில் தனியாக வசித்து வந்த குறித்த 74 வயதுடைய மூதாட்டி அண்மையில் தனது வீட்டில் மயங்கி விழுந்து அயலவர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 04 நாட்களுக்குப் பின்னர் அவர் உயிரிழந்துள்ளார்.
அவரின் பிரேதப் பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டமை தெரியவந்துள்ளது.