கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா..!

மூலனூர் அண்ணா நகர் இளைஞர் அணியால் கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா நடாத்தப்பட்டது.

மூலனூர், அண்ணாநகர் சமுதாய கூட்டம் வளாகம் சந்தை அருகில் இந்த விழா 26-01-2024 இரவு 7.00 மணி முதல் 27-01-2024 இரவு 8-30 மணி வரை இடம்பெற்றது.

மின்ஒளியில் மாபெரும் கை பந்து போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா..!

4ம் மண்டலம் திருப்பூர் மாநகராட்சி தலைவரும் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான பத்மநாதன் அவர்களால் போட்டி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கலைஞரின் மாபெரும் நூற்றாண்டு நிறைவு விழா..!

திரு மக்கள் தெண்டபாணி அவர்கள், மூலனூர் பேரூராட்சி தலைவர், மற்றும் பேரூர் கழக செயலாளர் ஆகியோர் இந்த நிகழ்விற்கு தலைமை வகித்தனர்.

மேலும், இந்ந நிகழ்வில் திரு. துரை தமிழரசு அவர்கள் மூலனூர் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர்,திரு.எஸ். கார்த்தி அவர்கள் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை ச் செயலாளர்,திரு.சி. விஸ்வநாதன் அவர்கள் மூலனூர் பேரூர் கழக அவைத் தலைவர் திரு.வெ. மனோகரன் அவர்கள் செந்தில் அச்சகம் மூலனூர், திரு. அம்பாள் ரவி அவர்கள் 4வது வார்டு கவுன்சிலர் மூலனூர், முத்தான திரு மக்கள் க.தெண்டபாணி திருமதி சுமதி கார்த்தி மூலனூர் ஒன்றிய குழு தலைவர், திரு பாலமுருகன் 9வது வார்டு செயலாளர் திரு. அருண்மொழிவர்மன் இரண்டாம் வார்டு செயலாளர் மூலனூர், திரு.Palanisamy திரு. செந்தில்குமார் 7-வது வார்டு கவுன்சிலர் மூலனூர், திரு கன்னிமார் செல்வராஜ் ஆறாவது வார்டு செயலாளர் மூலனூர். மற்றும் திரு. எஸ் சரவணன் இளைஞர் அணி அமைப்பாளர் மூலனூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Social Share

Leave a Reply