மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுப்பு..!

மிரிஹான பகுதியிலுள்ள வீடொன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த தம்பதியினரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மிரிஹான ஜூபிலி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு;ள்ளன.

பொலீசார் வீட்டிற்கு சென்று சோதனை செய்தபோது, வீட்டின் அறையிலுள்ள கட்டிலில் சில தினங்களுக்கு முன் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டதுடன் வீட்டின் சமையலறையில் நிர்வாணமாக பெண் ஒருவரின் சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக அந்த வளாகத்தில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அயலவர் ஒருவர் மிரிஹான பொலிஸாருக்கு வழங்கிய அறிவித்தலின் பிரகாரம் குறித்த வீடு சோதனையிடப்பட்டுள்ளது.

திருமணமான 80 வயதுடைய ஆணும் 96 வயதான பெண்ணும் ஒருவருமே மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version