புத்தளம் – ஆனமடுவைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு..!

புத்தளம் – ஆனமடுவைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் காயமடைந்துள்ளார்.

இந்த சம்பவம் ஆனமடுவை பகுதியில் உள்ள நத்தேவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

ஆனமடுவை பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரே காயமடைந்துள்ளார்.

இரண்டு நபர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் ஆனமடுவை வைத்தியசாலைக்கு எடுத்துச் கொண்டு செல்லப்பட்டதையடுத்து மேலதிக சிகிச்சைகளுக்காக புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply