தலைமன்னாரில் சிறுமி கொலை.

தலைமன்னார் கிராமம் மேற்குப் பகுதியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்று(15/02)இரவு ஏழு மணியளவில் நான்காம் ஆண்டில் கல்வி கற்கும் குறித்த மாணவி தனது வீட்டிலிருந்து வெளியே சென்று மீண்டும் தனது வீட்டுக்குத் திரும்பாத நிலையில், சிறுமியின் வீட்டாரும் அக்கிராம மக்களும் இணைந்து தேடுவதில் ஈடுபட்டனர்.

எனினும் இரவு முழுவதும் தேடியும் அச்சிறுமியை கண்டு பிடிக்காமையால் அப்பகுதி பங்கு தந்தையும் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்தந்தையின் வேண்டுகோளுக்கு இணங்க அக்கிராம இளைஞர்கள் ஒன்று திரண்டு தேடுதலில் ஈடுபட்டபோது இன்று (16.02) வெள்ளிக்கிழமை அதிகாலையிலே இச்சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிறுமியின் வீட்டிலிருந்து சற்று தூரத்திலுள்ள ஒரு தென்னந் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ள வேலி ஓரத்திலேயே சடலம் கண்டு பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய பின் தோட்டத்தின் வேலியோரத்தில் போடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச் சம்பவம் தொடர்பாக தென்னந் தோட்டத்த்தில் காவல் புரியும் காவலாளி ஒருவர் சந்தேகத்தின் பேரில் தலைமன்னார் பொலிசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைகுட்படுத்தப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமன்னார் கிராமம் மேற்கு பகுதி சோகத்தில் ஆழ்ந்திருப்பதுடன் இங்குள்ள மீனவர்கள் இன்று கடற்தொழிலுக்குச் செல்லாமல் சிறுமியின் கொலைக்கு நீதி கோரி் வழி மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

தலைமன்னார் பொலிசார் இது தொடர்பில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

தலைமன்னாரில் சிறுமி கொலை.
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version