கச்சதீவு திருவிழாவை புறக்கணிக்க இந்தியாவின் தமிழ் நாட்டை சேர்ந்த மீனவர்கள் தீர்மானித்துள்ளனர்.
தமிழ்நாட்டு மீனவர்களால் இன்று நடத்தப்பட்ட அவசர ஆலோசனைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு சிறை தண்டனை விதிப்பதை கண்டித்து காலவரையறையற்ற போராட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலும் ராமேஸ்வரம் மீனவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் கைது செய்யப்படும் இந்திய மீனவர்களுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றமை மற்றும் படகுகள் அரசுடைமையாக்கப்படுகின்றமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த விடயம் தொடர்பில், ராமேஸ்வரத்தில் 200க்கு அதிகமான மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டனர்.