அமெரிக்க பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை – காரணம் என்ன? 

நிகழ்நிலை காப்பு சட்டம் உள்ளிட்ட சட்டங்களுடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு தொடர்புகள் குழுவின் சிரேஷ்ட தொழில்சார் பணிக்குழாமின் பிரதிநிதிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். 

மேலும், நாட்டின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் தெளிவை பெற்றுக்கொள்வதற்காக, குறித்த குழுவினர் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

அமெரிக்க பிரதிநிதிகள், மேற்குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் அரச அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply