இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோ மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 21 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பில் இன்று அதிகாலை அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
இதன்போது மீனவர்களின் படகுகள் இரண்டும் கைப்பற்றப்பட்டன.
கைது செய்யபட்ட இந்திய மீனவர்கள் சட்ட நடவடிக்கைக்காக கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.