நாளை முன்னெடுக்கவிருந்த பணிபகிஷ்கரிப்பை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சுகாதார தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இந்த விடயத்தினை அறிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சின் எழுத்துமூல கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.