அருணாச்சல பிரதேசத்தின் உரிமை குறித்து சீன பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள தெற்கு திபெத்தின் அருகே அமைந்துள்ள இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசம், தெற்கு திபெத்துக்கு சொந்தமானது என சீனா கூறிவருகிறது.
இந்த விடயத்தை உள்ளடக்கி சீனா அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
சீனா ஒரு போலியான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக கூறி இந்திய வெளியுறவு அமைச்சு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.