வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்.

சுகாதார தொழிற்சங்கங்கள் மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதற்கு  தீர்மானித்துள்ளனர். 

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2ம் திகதி காலை 6.30 மணி முதல் வேலை நிறுத்த போராட்டம் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவி குமுதேஷ் இன்று(27) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இந்த விடயத்தை தெரிவித்தார். 

சுகாதார தொழிற்சங்கங்கள் கடந்த காலங்களிலும், வைத்தியர்களுக்கு அதிகரிக்கப்பட்டுள்ள 35,000 ரூபாய் டெட் கொடுப்பனவை தமக்கும் வழங்குமாறு கோரி வேலைநிறுத்ததில் ஈடுபட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

Social Share

Leave a Reply