பிரிக்ஸ் கூட்டமைப்பில் இலங்கை இடம்பெற வேண்டும் – மனோ கணேசன் கோரிக்கை

எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஐக்கிய மக்கள் கூட்டணி, இலங்கைக்கு வருகைத்தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் துணை அமைச்சர் சன் ஹையான் குழுவினரை சந்தித்தது. 

இந்த சந்திப்பில், தமிழ் முற்போக்கு கூட்டணி சார்பாக தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர் திகாம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

இதன் போது மனோ கணேசன், “இன்று உலக பொருளாதாரம் ஆசியாவை மையமாக கொண்டுள்ளது. இங்கே சீனா தலைமை பாத்திரம் வகிக்கின்றது.  இதற்கு மேலதிகமாக,  சீனா, இந்தியா, ரஷ்யா, தென்னாபிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளின் ‘பிரிக்ஸ்’ என்ற கூட்டமைப்பு உருவாகி உள்ளது.”

“இந்த பிரபல பிரிக்ஸ் கூட்டில் இலங்கையும் எதிர்காலத்தில்  இடம்பெற சீனா உதவிட வேண்டும்” என சீன அமைச்சர் சன் ஹையானிடம் கோரிக்கை விடுத்தார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version