இந்த வருடத்தின் இறுதியில் அல்லது அடுத்த வருடத்தின் முற்பகுதியிலிருந்து மீண்டும் வாகனங்களை
இறக்குமதி செய்வதற்கு எதிர்பார்ப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக
அமைச்சின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளும் கவனத்திற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னதாகவே
ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.