மன்னாரில் சட்டவிரோத வெடிபொருட்களுடன் மீனவர்கள் கைது

மன்னாரில் சட்டவிரோதமாக வெடிப்பொருட்களை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மீனவர்கள் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (27) மன்னார் சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போதே மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீன்பிடிக்காக பயன்படத்தப்பட்ட உபகரணங்கள் மீன்களும்
கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

கைப்பற்றப்பட்ட மீன்களின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய மீன்களை “நாரா”நிறுவனத்துக்கு அனுப்புமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன்‌ மீனவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version