மதுபானசாலைகளுக்கு பூட்டு

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மே மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரம் கொண்டாடப்படுகின்ற நிலையில் 22, 23, 24ஆம் திகதிகளில் மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply