பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாளொன்றுக்கு 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கான அதிவிசேட வர்த்தமானி வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
மேலும், பெருந்தோட்ட தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் நாளொன்றுக்கு 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இன்று(01.05) நடைபெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.