சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு..! 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக  விஜயதாச ராஜபக்‌ஷ போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்க தலைவர் டி.பி.இளங்கரத்னவின் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார். 

விஜயதாச ராஜபக்‌ஷவிற்கு கட்சியின் பெரும்பான்மையான உறுப்பினர்களின் ஆதரவு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

விஜயதாச ராஜபக்‌ஷ தற்போது இப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்தவர் எனவும், அவருக்கு அமைச்சராக செயற்படுவதில் விருப்பம் இல்லை எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version