சீனாவில் மழை காரணமாக இடிந்து வீழ்ந்த வீதி – 48 பேர் பலி

தெற்கு சீனாவில் பலத்த மழை காரணமாக வீதியின் ஒரு பகுதி இடிந்து வீழ்ந்ததில் 48 பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் Guangdong மாகாணத்தில் உள்ள Meizhou நகரையும் Dabu county-யையும் இணைக்கும்
அதிவேக வீதியின் ஒரு பகுதி நேற்று (01) இடிந்து வீழ்ந்தது.

இதன்போது மேலும் 30 பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கீழே வீழ்ந்த 23 வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Social Share

Leave a Reply