நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டியொன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இந்த சம்பவம் இன்று (03) பகல் இடம்பெற்றுள்ளது.
நோட்டன் பிரிட்ஜ் பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீ பிடித்து எரிந்துள்ளது.
முச்சக்கரவண்டியினை வீதியோரத்தில் நிறுத்திவிட்டு மீண்டும் முச்சக்கர வண்டியினை இயக்க முற்பட்ட போது திடீரென தீப்பரவியுள்ளது.
தீப் பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் இயந்திரப் பகுதியில் பெற்றோல் கசிவு ஏற்பட்டு தீப்பரவியிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தால் உயிர் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை. முச்சக்கர வண்டி முற்றாக தீக்கிரையானது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.