அம்பாறையில் இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பாடசாலை மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலை சேவையில் ஈடுபடும் பஸ்ஸொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்றும் நேருக்கு நேர் மோதியதில் விபத்து
சம்பவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மாணவர்கள் அம்பாறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.