திருகோணமலையில் இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம்

திருகோணமலை இந்திய எண்ணெய் நிறுவனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியில் சாம்பல் தீவு பாலத்திற்கு அருகாமையில் எரிபொருள் நிலையம் அமையப்பெற்றுள்ளது.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் எரிபொருள் நிரப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

இதன்போது சந்தோஷ் ஜா இவ்வாறு கருத்து தெரிவித்தார்

“இலங்கையின் அபிவிருத்தியில் இந்தியாவுக்கு பாரிய பங்கு காணப்படுகின்றது. அதில் பலதரப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

கிழக்கினை அபிவிருத்தி செய்ய திருகோணமலைக்கும் இந்தியாவுக்குமான தொடர்புகள் மேலும் விஸ்தரிக்கப்பட்டு அதனூடாக பல வேலைவாய்ப்புக்களை உருவாக்க எதிர்பார்த்துள்ளோம்

இந்தியாவுக்கும் திருகோணமலைக்கும் நேரடி தொடர்பினை உருவாக்கும் நோக்கில் நேரடி எண்ணெய்க் குழாய்மூலம் இரு நாடுகளையும் இணைக்கும் செயற்திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்

Social Share

Leave a Reply