சீசெல்ஸ் நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை கடற்றொழிலாளர்களை மீட்பதற்கு இராஜதந்திர மட்டத்திலான ஏற்பாடுகள்
பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அந்த மீனவர்கைளை இலங்கைக்கு அழைத்துவருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி மீனவர்களின் உறவினர்கள்
அமைச்சரைச் சந்தித்து நேற்று (06) முறையிட்டனர்.
கடந்த சில மாங்களுக்கு முன்னர் இலங்கையிலிருந்து லொரென்சோ புத்தா-04 என்ற ஆழ்கடல் மீன்பிடிப்படகில் கடற்றொழில்
நடவடிக்கைளுக்காக சென்ற இலங்கை மீனவர்கள் 06 பேர் சர்வதேச கடற்பரப்பில் சோமாலியக் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டனர்.
இலங்கை அதிகாரிகளின் துரித நடவடிக்கை காரணமாக சீசெல்ஸ் கரையோரக் காவற்படை மற்றும் கடற்படையினரால்
குறித்த மீனவர்கள் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில் சீசெல்ஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர்கள் எதிர்வரும் சில நாட்களில் நாட்டிற்கு அழைத்து வரப்படுவார்கள்
என கடற்றொழில் அமைச்சர் உறுதியளித்தார்.