நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட
முறைப்பாடு எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
ஊவா மாகாண ஆளுநர் மொஹமட் முஸம்மிலின் மகன் தாக்கல் செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த வழக்கு விசாரணை இடம்பெறுகின்றது.
மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை 02 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சட்டத்தரணிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் காலவகாசம் வழங்கியுள்ளது.