மைத்திரிக்கு எதிரான தடை நீடிப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செயற்படுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 29ம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று(09.05) உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட மனு இன்று(09.05) கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகள் இருந்தால் தாக்கல் செய்யுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி, வழக்கை எதிர்வரும் 29ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தார். 

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக மைத்திரிபால சிறிசேனவை நியமித்தமை கட்சியின் யாப்புக்கு முரணானது எனவும், அவர் கட்சி தலைமை பதவியை வகிப்பதை தடுத்து உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி சந்திரிகா குமாரதுங்க குறித்த மனுவினை தாக்கல் செய்திருந்தார்.

Social Share

Leave a Reply