பதுளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலி

பதுளை – புவக்கொடமுல்ல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர்
உயிரிழந்துள்ளதுன் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று (10) காலை இடம்பெற்றுள்ளது

தெஹியத்தகண்டிய டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து
சொந்தமான பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும்
நேருக்கு நேர் மோதியதில் விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வளைவில் குடிநீர் குழாய் பராமரிப்புக்காக
ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளதாகல் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுவதாக
பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version