டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த 2 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரு பயணிகளும் 1,083 கையடக்கத் தொலைபேசிகளும் மற்றும் 200 உயர் கொள்ளளவு கொண்ட பென்டிரைவ்களும் (Pen Drive) வைத்திருந்த குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் டுபாயிலிருந்து இன்று(17.05) காலை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட இலத்திரனியல் பொருட்களின் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.