சீதையம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வழிபாட்டில் ஈடுபட்ட சஜித் 

நுவரேலியா, சீதாஎலிய சீதையம்மன் ஆலய மஹா கும்பாபிஷேகப் பெருவிழாவிற்கான  சீர்வரிசை பொருட்களை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லும் பூஜை வழிபாடுகள் இன்று(17) காலை கொழும்பு மயூரபதி ஆலயத்தில் இடம்பெற்றது. 

நுவரேலியா சீதாஎலிய சீதையம்மன் ஆலய பரிபாலன சபை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன், மயூரபதி ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பெரியசாமி சுந்தரலிங்கம் ஆகியோரின் விசேட அழைப்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து இந்நிகழ்வில் கலந்து கொண்டதாக எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியாவின் அயோத்தி ராமர் கோயில் மற்றும் சீதை பிறந்த இடமான நேபாளம் ஆகிய இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட சீர்வரிசை பொருட்கள், கோயம்புத்தூரில் இருந்து கொண்டுவரப்பட்ட கலசங்கள் மற்றும் இந்திய புண்ணிய நதிகளின் தீர்த்தம் ஆகியன மயூரபதி ஆலயத்தில் இருந்து இன்று வெள்ளிக்கிழமை காலை தீர்த்த ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

Social Share

Leave a Reply