ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூடு சம்பவம் – நீதிமன்றின் தீர்ப்பு

சுத்தமான குடிநீர் கோரி, கம்பஹா – ரத்துபஸ்வல பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிலர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்ட
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வரும் குற்றமற்றவர்களாக அறிவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ பிரிகேடியர் ஒருவர் உட்பட 04 இராணுவத்தினரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகள் அனைவரும் சட்டவிரோதமாக அங்கு ஒன்று கூடியதாக
முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கான போதிய சான்றுகள் இல்லாமையால் இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு சுத்தமான குடிநீர் கோரி நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, மூவர் பேர் கொலை செய்யப்பட்டமை மற்றும் 50 பேர் வரை காயமடைந்தமை தொடர்பில் இராணுவ உத்தியோகத்தர்களுக்கு எதிராக சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

Social Share

Leave a Reply