நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம்
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதில் தற்போதுள்ள தடைகளை நீக்க முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளனர்.
மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்
குறித்து ஆராய்வதற்காகவே இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.