ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொலை 

ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று நபர்களை கொலை செய்த குற்றச்சாட்டில் நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

வயோதிப தம்பதிகள் மற்றும் அவர்களது மகனை கொலை செய்த சம்பவம் மீரிகம, மாலதெனிய பிரதேசத்தில் இன்று(19.05) காலை பதிவாகியிருந்தது. 

80 மற்றும் 77 வயதுடைய தம்பதி மற்றும் அவர்களது 42 வயது மகன் ஒருவரும் அவர்களுடைய வீட்டில் வைத்து இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். 

சம்பவத்துடன் தொடர்புடைய 42 வயதுடைய சந்தேக நபரொருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  

மாலதெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version