சீரற்ற வானிலை காரணமாக கொழும்பின் சில வீதிகள் மூடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு பிரேபுரூக் பிளேஸ், பொரளை மயான சுற்றுவட்டத்தில் இருந்து தும்முல்லை சந்தி, பௌத்தலோக மாவத்தை, சர் லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ் சுற்றுவட்டத்திலிருந்து ரொட்டுண்டா சுற்றுவட்டம் வரையான வீதிகள் மூடப்பட்டுள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீதிகள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.