இந்தியாவிலிருந்து படகு மூலம் சட்ட விரோதமான முறையில் தலைமன்னாருக்கு வருகைத் தந்த இலங்கையைச் சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னார் ஊர்மனை கடற்கரை பகுதியில் நேற்று(03.06) காலை குறித்த ஐவரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 24 மற்றும் 38 வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் மன்னார், தாழ்வுபாடு, தலைமன்னார், வவுனியா, கிளிநொச்சி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
குறித்த ஐவரும் இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு சில வருடங்களுக்கு முன் சென்றுள்ள நிலையில், அங்கு பல்வேறு இடங்களில் வசித்து வந்துள்ளனர். பின்னர், சட்ட விரோதமான முறையில் படகு மூலம் இந்தியாவில் இருந்து தலைமன்னார் ஊர்மனை பகுதிக்கு வருகை தந்துள்ளனர்.
பொலிஸாரின் விசாரணைகளை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் அஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.