சஜித்துடன் இணைந்த மொட்டுக் கட்சியின் மற்றுமொரு உறுப்பினர் 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் ஏற்பாட்டாளர் அப்துல் மஜீத், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் அரசியல் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் நேற்றைய தினம் (04.06) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.

இவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் முன்னாள் பிரதான அமைப்பாளராகவும், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். 

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் ஐக்கிய மக்கள் சக்தியின் பொத்துவில் தேர்தல் தொகுதியின் இணை அமைப்பாளராக நேற்றைய தினம் அவர் நியமிக்கப்பட்டார்.

Social Share

Leave a Reply