வருடாந்தம் 800 டொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்வதாக தகவல்

வருடாந்தம் 800 டொன் பிளாஸ்டிக் கழிவுகள் நீர் நிலைகளில் சேர்வதாக சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற
மேற்பார்வைக் குழுவில் கண்டறியப்பட்டுள்ளது.

வருடாந்தம் 1,600 பிளாஸ்டிக் கழிவுகள் ஏற்றுமதி செய்யப்படுவதாக சுற்றாடல் துறைசார் நாடாளுமன்ற
மேற்பார்வைக் குழுவின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார்.

முறையான பிளாஸ்டிக் மீள்சுழற்சி செயன்முறையின் ஊடாக, சுற்றாடலுக்கு பிளாஸ்டிக் கழிவுகளால்
ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ளமுடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலிருந்து அகற்றப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பதற்கான,
விசேட வேலைத்திட்டமொன்றும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Social Share

Leave a Reply