ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு மீண்டும் இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையில் நேற்று(07.06) நியூயோர்க்கில் இடம்பெற்ற வாக்கெடுப்பின் போது இந்த தெரிவு இடம்பெற்றதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு மொத்தமாக 182 வாக்குகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக சபைக்கு இலங்கை தேர்ந்தெடுக்கப்பட்டது.
சபையின் உறுப்பினராக, வறுமை ஒழிப்பு, உணவுப் பாதுகாப்பு மற்றும் பாலின சமத்துவம் உள்ளிட்ட திட்டங்களுக்கு இலங்கை பங்களிப்பதாக வெளிவிவகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.