கொவிட் 19 தொற்றுக்குள்ளாகியிருந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் பூரண குணமடைந்து சற்று முன்னர் வீடு திரும்பியுள்ளார்.
ரெபிட் அன்டிஜன் பரிசோதனையின் போது கொவிட் 19 தொற்று உறுதியான நிலையில், மனோ எம்.பி கடந்த வாரம் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக வி மீடியாவுக்குத் தெரிவித்தார்.
