பிரான்ஸ் பாராளுமன்றத்தை கலைத்து பொது தேர்தலுக்கு தயாராகுமாறும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, பிரான்சில் எதிர்வரும் 30 மற்றும் ஜூலை 7 ஆகிய திகதிகளில் இரண்டு சுற்று வாக்குப்பதிவுகள் இடம்பெறும் என இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பிரான்ஸ் ஜனாதிபதியின் இந்த அறிவிப்பு பெரும் ஆச்சரியம் அளிப்பதாக அந்நாட்டின் அரசியல் விஞ்ஞானி டொமினிக் மொய்சி சுட்டிக்காட்டியுள்ளார்.
பிரான்சில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு இன்னும் சில வாரங்கள் மாத்திரம் காணப்படும் நிலையில் அவர் பாராளுமன்றத்தை கலைப்பார் என எதிர்பார்க்கப்படவில்லையென கூறப்படுகின்றது.