3 ஓவர்களில் வெற்றியிலக்கை கடந்த இங்கிலாந்து அணி..!

டி20 உலகக் கிண்ணத் தொடரில் ஓமான் அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி அபார வெற்றியீட்டியது. மேற்கிந்திய தீவுகள், அன்டிகாவில் இன்று(14.06) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி 13.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 47 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. இங்கிலாந்து அணி சார்பில் பந்து வீச்சில் அதில் ரஷித் 4 விக்கெட்டுக்களையும், ஜோப்ரா ஆர்ச்சர், மார்க் வூட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களையும் பெற்றுக் கொண்டனர். 

48 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 3.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை கடந்தது. அதிக பந்துகள் மீதமிருக்கின்ற போது அணியொன்று வெற்றியிலக்கை கடந்த சந்தர்ப்பமாக இது பதிவாகியது. இங்கிலாந்து அணி சார்பில் ஜோஸ் பட்லர் 8 பந்துகளில் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். 

இதன்படி, இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளினால் வெற்றியீட்டியதுடன், போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் அதில் ரஷித் தெரிவு செய்யப்பட்டார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version