இந்திய வெளிவிவகார அமைச்சர், கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று(20.06) நாட்டிற்கு வருகை தரவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது அவர்;, ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று மாலை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளதாக பிரதான தமிழ் கட்சிகள் தெரிவித்துள்ளன.
கலாநிதி எ.ஜெய்சங்கருடன் இந்திய வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் நாட்டிற்கு வருகை தரவுள்ளனர்.