19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாட்டில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கத்தின் காரணமாக நாட்டின் பெரும்பாலான இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகுமென எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய ஊவா, கிழக்கு, சப்ரகமுவ, மத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களில் 100 மில்லிமீற்றர் அளவிலான மழைவீழ்ச்சி பதிவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை திருகோணமலை, புத்தளம், குருநாகல், மாத்தளை, மட்டக்களப்பு, கம்பஹா, கேகாலை, கண்டி, கொழும்பு, நுவரெலியா, பதுளை, அம்பாறை, இரத்தினபுரி, மொனராகலை, காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version