ஊடகவியலாளருக்கு நஷ்டஈடு வழங்குமாறு தொலைக்காட்சி அலைவரிசைக்கு உத்தரவு 

இலங்கை தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் 08 வருடங்களாக பணியாற்றிய ஊடகவியலாளர் ஒருவரை சட்டவிரோதமான முறையில் சேவையிலிருந்து நீக்கியமைக்கு எதிராக, குறித்த ஊடகவியலாளருக்கு 13.5 மில்லியன் ரூபாவை நஷ்டஈடாக வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊடகவியலாளரை சேவையிலிருந்து நீக்கிய காலப்பகுதியில், அவர் மீதான குற்றச்சாட்டுகளை தொலைக்காட்சி அலைவரிசை நிரூபிக்க தவறியுள்ளதாக நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஊடகவியலாளர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் எவ்வித அடிப்படையுமின்றி தொலைக்காட்சி அலைவரிசை நிர்வாகத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, ஊடகவியலாளர் நிரோஷ் மைத்திரிக்கு 13.5 மில்லியன் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு Asia Broadcasting Corporation (Pvt) ltd (ABC networks) நிறுவனத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரதிவாதிகளுக்கு எதிர்வரும் 02ம் திகதி வரை மேல்முறையீடு செய்வதற்கு கால அவகாசம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Social Share

Leave a Reply