மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி

மன்னாரில் மோட்டார் சைக்கிளொன்று கொடிக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில்

ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொரு நபர் காயமடைந்துள்ளார்.

இந்த விபத்து மடு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட

இரண்டாம் கட்டைப் பகுதியில் இன்று அதிகாலை (29/06) இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர் முருங்கன் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு,மேலதிக சிகிச்சைகளுக்காக,மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மன்னார் பெரியகமம் பிரதேசத்தைச் சேர்ந்த

36 வயதுடைய இளம் குடும்பஸ்தர் ஒருவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ரோகினி நிஷாந்தன்

மன்னார் செய்தியாளர்.

Social Share

Leave a Reply