சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 84,383 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிலிருந்து 22,629 பயணிகளும், பிரித்தானியாவிலிருந்து 6,730 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 6,227 பேரும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
இந்த வருட ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 9 லட்சத்து 81 ஆயிரத்து 162 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.