பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது

ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார வாகன விபத்து சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்,கருவலகஸ்வெவ பகுதியில் இன்று அதிகாலை (29.06) யசோத ரங்கே பண்டார பயணித்த கார் வீதியை விட்டு விலகி முச்சக்கர வண்டியுடன் மோதியுள்ளது.

இதன்பின்னர் , முச்சக்கரவண்டி சாரதி காயமடைந்த நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் பாலித ரங்கே பண்டாரவின் மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கருவலகஸ்வெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply