மதுபானம் என நினைத்து விஷம் அருந்திய மீனவர்கள் பலி

ஹம்பாந்தோட்டை தங்காலை கடலுக்குச் சென்ற கடற்றொழிலாளர்கள் மதுபானம்
என நினைத்து போத்தலில் இருந்த விஷக் கரைசலை குடித்ததில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு (29.06)இடம்பெற்றதாக கடற்றொழில்
பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த தெரிவித்துள்ளார்.

விஷக் கரைசலை அருந்திய மேலும் மூன்று கடற்றொழிலாளர்கள் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று
வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்காலை துறைமுகத்திலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற ‘டெலோன்’
என்ற படகில் இருந்த 06 பேருக்கு இவ்வாறானதொரு நிலை ஏற்பட்டுள்ளது.

படகிலிருந்த தகவல் அனுப்பும் இயந்திரங்கள் ஊடாக இந்த தகவல் கரைக்கு
அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Social Share

Leave a Reply