பாடசாலை ரக்பி வீரர்களுக்கு காப்புறுதி 

ரக்பி விளையாட்டில் ஈடுபடும் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் காப்புறுதி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

கொழும்பு இசிபதன கல்லூரிக்கும், கண்டி திரித்துவ கல்லூரிக்கும் இடையில் நேற்று(13.07) நடைபெற்ற ரக்பி லீக் போட்டிக்கு முன்னதாக நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இரு பாடசாலைகளின் ரக்பி வீரர்களுக்கு காப்புறுதி திட்டத்தினை வழங்கி வைத்தார். 

இந்த காப்புறுதி திட்டத்தினூடாக இலங்கையில் உள்ள அனைத்து ரக்பி விளையாடும் பாடசாலைகளிலும் உள்ள 19 மற்றும் 16  வயதுக்குட்பட்ட ரக்பி வீரர்கள் பயன் பெறவுள்ளனர்.

இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்து குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version