மொட்டுக் கட்சியின் வேட்பாளர் தொடர்பில் நாமல் 

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேராவோ போட்டியிடவுள்ளதாக எவ்வித எழுத்துமூல அறிவிப்புகளும் கிடைக்கவில்லை என கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தனக்கும் எவ்வித அறிவிப்புகளும் கிடைக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் தேசிய சொத்துக்களை விற்பனை செய்யாமல், நாட்டின் கடனை செலுத்தும் திறன் கொண்டவராக இருப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பல நபர்கள் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கட்சியுடன் கலந்துரையாடி வருவதாகவும், உரிய நேரத்தில் பொருத்தமான வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply