சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு 

சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புகளுக்கான வட்டி வீதம் அதிகரிப்பு 

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்கான வட்டி வீதத்தை 10% ஆக அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 

ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில், சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புத் தொகைக்காக தற்பொழுது வழங்கப்படும் 7.5% வட்டி வீதம், 2.5 வீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. 

இவ்வாறு அதிகரிக்கப்படும் வட்டி வீதத்தை அரச வங்கிகளுக்கு மானியமாக வழங்குவதற்கு ஜனாதிபதி சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட பிரஜைகளின் அதிகபட்சம் ஒரு மில்லியன் ரூபாய் வரையான நிலையான வைப்புத் தொகைக்கான வருடாந்த வட்டி வீதம் 2 வருடங்களுக்கு 10% ஆக வழங்கப்படவுள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version