ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சர்வதேச தொடர்புகள் குறித்த நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவிலிருந்து விலகியுள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்ற அமர்வில் இதனை அறிவித்துள்ளார்.
இந்நிலையில் அந்த வெற்றிடத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சீ தொலவத்த நியமிக்கப்பட்டுள்ளதாகச் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சசர்வதேச தொடர்புகள் குறித்த நாடாளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் தலைவராகச் செயற்பட்டிருந்தார்.