இலங்கை மகளிர் எதிர் அயர்லாந்து டி20 தொடர் சமநிலையில் நிறைவு 

இலங்கை மகளிர் எதிர் அயர்லாந்து டி20 தொடர் சமநிலையில் நிறைவு 

அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை மகளிர் அணிக்கும், அயர்லாந்து மகளிர் அணிக்கு இடையிலான டி20 தொடர் சமநிலையில் நிறைவடைந்துள்ளது. 

தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை மகளிர் அணி வெற்றி பெற்ற போதும், நேற்று(13.08) நடைபெற்ற தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் அயர்லாந்து அணி வெற்றியீட்டியதனுடாக தொடர் சமநிலையில் நிறைவடைந்தது. 

அயர்லாந்து, டப்ளினில் நேற்று(13.08) நடைபெற்ற இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. 

அதன்படி, அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 172 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அயர்லாந்து அணி சார்பில் கேபி லூயிஸ் 119(75) ஓட்டங்களையும், ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 38(31) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். இலங்கை அணி சார்பில் பந்துவீச்சில் அச்சினி குலசூர்ய, சஹஷினி கிம்ஹனி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினைப் பெற்றுக்கொண்டனர்.   

173 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 166 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் ஹர்ஷிதா சமரவிக்ரம 65(44) ஓட்டங்களையும், கவிஷா தில்ஹாரி 51(48) ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். அயர்லாந்து அணி சார்பில் பந்துவீச்சில் ஓர்லா பிரெண்டர்காஸ்ட் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

இதன்படி, அயர்லாந்து மகளிர் அணி 7 ஓட்டங்களினால் இந்த போட்டியில் வெற்றியீட்டியதுடன், 2 போட்டிகள் கொண்ட தொடர் 1-1 என்ற ரீதியில் சமநிலையில் நிறைவடைந்தது. அயர்லாந்து அணியின் கேபி லூயிஸ் போட்டியின் ஆட்ட நாயகியாகவும், தொடரின் ஆட்ட நாயகியாகவும் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version